முகப்பு
தற்போதைய செய்திகள்

மகனுக்கு கொலைமிரட்டல் விடுத்த தந்தை கைது

பழனி அருகே மகனை பிளேடால் கீறி கொலைமிரட்டல் விடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:11 PM
பகிர்:

பழனி அருகே மகனை பிளேடால் கீறி கொலைமிரட்டல் விடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.

பழனி அருகே கரிக்காரன்புதூர் அருவங்காட்டை சேர்ந்தவர் விசுவநாதன்.  இவரது மகன் சரத்குமார்.  கடந்த புதன்கிழமை திருமணம் ஒன்றிற்கு விசுவநாதன் மகள் மற்றும் குடும்பத்தார் செல்ல வேண்டி இருந்ததால் விசுவநாதனின் 7வயது பேத்தியை அவரிடம் விட்டு விட்டு சென்றனர்.  திரும்ப வந்து பார்த்த போது குழந்தையை காணாமல் தேட வேண்டி இருந்தது.  இதுகுறித்து சரத்குமார் தந்தையை கடிந்து கொண்ட போது ஆத்திரமடைந்த விசுவநாதன் சரத்குமாரின் உடலில் பிளேடால் கீறி கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.  இதையடுத்து மகன் கொடுத்த புகாரின் பேரில் விசுவநாதனை பழனி தாலுகா போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.