தற்போதைய செய்திகள்

மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை கடத்தல்

மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டது.

ஜெயப்பாண்டி

மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தொம்மப்பட்டியைச் சேர்ந்தவர் தினகரன். இவருடைய மனைவி மீனாட்சி பிரசவத்துக்காக வெள்ளிக்கிழமை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வெள்ளிக்கிழமை காலையில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை குழந்தையை மீனாட்சியிடம் இருந்து பாட்டி கேட்டதாகக் கூறி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பிறகுதான் பாட்டியிடம் குழந்தை சேரவில்லை என்று தெரிந்தது. இதையடுத்து, வெகு நேரம் ஆகியும் குழந்தையைக் காணாததால், போலீசில் புகார்  அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. அப்போதுதான், குழந்தை கடத்தப்பட்டது தெரிய வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், தற்போது மேலும் குழந்தைக கடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT