முகப்பு
தற்போதைய செய்திகள்

கோபி அருகே மோட்டார் சைக்கிள்- சைக்கிள் மோதல்.வியாபாரி சாவு.

கோபி அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

கோபி அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கோபியை அடுத்த சிறுவலூர் இலந்தைக் காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி(60). இவர் வாழைப்பழம் மற்றும் வாழைஇலை வியாபாரி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் வாழைப்பழங்களை கட்டிக் கொண்டு கோபி அருகேயுள்ள மொடச்சூர் சந்தைக்கு சனிக்கிழமை வந்து கொண்டிருந்தார்.

யூனிட்டி நகர் என்ற இடத்தில் வந்த போது  அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற இளநீர் வியாபாரி தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் மோதியது. இந்த விபத்தில் மணியும், பழனிச்சாமியும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

உடனடியாக, இவர்களை கோபி அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே மணி உயிரிழந்தார். இளநீர் வியாபாரி பழனிச்சாமி படுகாயமடைந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →