புவனகிரி எல்ஐசி கிளை அலுவலகத்தில் ரூ.18 ஆயிரம் திருட்டு
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் ரூ.18 ரொக்கம் செவ்வாய்க்கிழமை திருடுபோனது.
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் ரூ.18 ரொக்கம் செவ்வாய்க்கிழமை திருடுபோனது.
சிதம்பரம் அருகே புவனகிரி பஸ்நிலையம் அருகே கடந்த ஜூன் 10-ம் தேதி எல்.ஐ.சி கிளை அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் அலுவலகத்தில் வாடிக்கையாளர் செலுத்திய பணம் ரூ.18 ஆயிரத்தை துணிப்பையில் சுற்றி மேஜை மீது வைக்கப்பட்டிருந்ததை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து கிளை மேலாளர் செல்வராஜ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.