முகப்பு
தற்போதைய செய்திகள்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வெளிநடப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலையில் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:54 PM

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலையில் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர்கள் 100 பேருக்கு உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு, கிராம ஊராட்சிகளில் செயலாளர்களுக்கு பணி வரைமுறை செய்து ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி பணியாளர்கள் சங்கத்தினர் மாலை 4.45 மணி முதல் 5 மணி வரையில் பணி செய்யாமல் வெளிநடப்பில் ஈடுபட்டனர். அதேபோல், விருதுநகர் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

எனவே பணி முடியும் நேரத்திற்கு முன்னதாக ஈடுபட்டதால் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இதேபோல் இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஜூலை-2ம் தேதி பணியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்தவும் இருப்பதாக மாவட்ட ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்தார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.