முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீநடராஜர் கோயில் உண்டியலில் ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் காணிக்கை

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஜூன் 20-ம் தேதி வியாழக்கிழமை 22வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டத்தில் 9லட்சத்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:24 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஜூன் 20-ம் தேதி வியாழக்கிழமை 22வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டத்தில் 9லட்சத்து 25 ஆயிரத்து 631 ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்துள்ளது. இதுவரை 21 முறை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் மொத்தம் 1 கோடியே 28 லட்சத்து 23 ஆயிரத்து 913 ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

ஸ்ரீநடராஜர் கோயிலை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத்துறை கடந்த 2009-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி கையகப்படுத்தி புதிய நிர்வாக அலுவலரை நியமித்தது. பின்னர் பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே முதன்முதலாக கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிபடியாக கோயிலில் பல்வேறு இடங்களில் மொத்தம் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டது.

தற்போது வியாழக்கிழமை (ஜூன் 20) இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, செயல்அலுவலர் (பொறுப்பு) கே.கிருஷ்ணகுமார்,  ஆய்வாளர் ரே.தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் 21-வது முறையாக உண்டியல் எண்ணப்பட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.  9 உண்டியல்களை திறந்து எண்ணப்பட்டதில் 9 லட்சத்து 25 ஆயிரத்து 631 ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்தது. மேலும் உண்டியலில் 12 கிராம் தங்கம் மற்றும் 65 கிராம் வெள்ளி பொருள்களும், மலேசியா ரிங்கட்-445,  யு.எஸ்.ஏ டாலர்-55, ஓமன் பைசா-100,  ஆஸ்திரேலியா டாலர் 10,  இங்கிலாந்து பவுண்டு- 20  ஆகியவை இருந்தது.  உண்டியல் வைக்கப்பட்டு 4 வருடங்களில் இதுவரை 22 முறை உண்டியல் எண்ணியதில் மொத்தம் ரூ.1 கோடியே, 28லட்சத்து 23 ஆயிரத்து 631 ரூபாய் கிடைத்துள்ளது என செயல்அலுவலர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.