சார்பு-ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
விருதுநகர் கச்சேரி சாலையில் வியாழக்கிழமை இரவு மேற்கு காவல் நிலைய போலீஸார் தீவிரமாக வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக லட்சுமி நகரை சேர்ந்த செபாஸ்டின் மகன் கண்ணன்(
விருதுநகர் கச்சேரி சாலையில் வியாழக்கிழமை இரவு மேற்கு காவல் நிலைய போலீஸார் தீவிரமாக வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக லட்சுமி நகரை சேர்ந்த செபாஸ்டின் மகன் கண்ணன்(40) வந்துள்ளார். அவரை சார்பு ஆய்வாளர் குருநாதன் நிறுத்தி வாகனத் தனிக்கையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாகனத்திற்கான ஆவணம் மற்றும் காப்பீடு சம்பந்தமான ரசீது உள்ளிட்டவைகளை காட்டும் படி கூறினாராம்.
அதெல்லாம், கையோடு கொண்டு வரவில்லையென கண்ணன் கூறி மறுத்துள்ளார். அதையடுத்து, வாகனத்தை காவல் நிலையத்தில் நிறுத்தி விட்டு ஆவணங்கள் கொண்டு வந்து காட்டி எடுத்துச் செல்லும்மாறு கூறினாராம். அதற்கு, ஆவணங்கள் எல்லாம் அடிக்கடி காட்டவேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி கண்டபடி பேசியும், வாகனத்தையும் காவல் நிலையத்தில் நிறுத்த முடியாத எனக் கூறி தகராறு செய்தாராம். அதோடு, பணி செய்ய விடாமல் தடுத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக சார்பு ஆய்வாளர் குருநாதன் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் கண்ணனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Advertisement