விருதுநகர் நடந்து சென்ற பெண்ணிடம் 3 சவரன் நகை பறிப்பு
விருதுநகரில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கழுத்தில் கிடந்த 3 சவரன் நகை பறித்துச் சென்று தப்பியோடிய மர்ம நபர் குறித்து போலீஸார் தீவீரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
விருதுநகரில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கழுத்தில் கிடந்த 3 சவரன் நகை பறித்துச் சென்று தப்பியோடிய மர்ம நபர் குறித்து போலீஸார் தீவீரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் அருகே முத்துராமன்பட்டியில், சிவந்திபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் என்பவரின் மனைவி சந்திரா(57). இவர் கடைவீதியில் பொருள்கள் வாங்கிக் கொண்டு வெள்ளிக்கிழமை சத்தியமூர்த்தி சாலையில் தனியார் கண் மருத்துவமனை முன்பு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவர் பின்னே 30 வயதுடைய மர்ம நபர் ஒருவர் நடந்து வேகமாக வந்து வழிமறித்து கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்தாராம்.
பின்னர், சத்தம் போட்டதையடுத்து பொதுமக்கள் வந்து கூடி விரட்டியுள்ளனர். அப்போது மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அந்த இடத்திலிருந்து தப்பியோடினார். இது குறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸாரிடம் சந்திரா புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
Advertisement