விருதுநகர் மாவட்டத்திலிருந்து யாத்திரை சென்றவர்களின் உறவினர்க்கு தகவல் மையம் ஏற்பாடு
விருதுநகர் மாவட்டத்திலிருந்து கேத்ரிநாத், பத்ரிநாத் போன்ற பகுதிகளுக்கு யாத்திரையாக சென்றவர்களை மீட்பதற்கு வசதியாக விவரங்களை உறவினர்கள உடனே அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திலிருந்து கேத்ரிநாத், பத்ரிநாத் போன்ற பகுதிகளுக்கு யாத்திரையாக சென்றவர்களை மீட்பதற்கு வசதியாக விவரங்களை உறவினர்கள உடனே அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
வடமாநிலங்களான உத்தரிகண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் புதுதில்லி போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இம்மழையின் காரணமாக கங்கை, யமுனா போன்ற ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், போக்குவரத்து வாகனங்கள் மூழ்கி, ஏராளமான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
Advertisement
இது குறித்து தகவல் அறி்ந்து கொண்ட தமிழக முதல்வர் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் யாத்திரையாக சென்றவர்களை மீட்பதற்கு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், மழையால் பாதிப்பிலிருந்து மீட்கும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் பற்றிய தகவல்களை உடனே அளிப்பதற்கு ஏதுவாக புதுதில்லி தமிழ்நாடு இலத்தில் 24 மணிநேரம் செயல்படும் தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே விருதுநகர் மாவட்டத்திலிருந்து கேத்ரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற யாத்திரிகர்கள் பத்திரமாக உள்ளனர். அதனால், இவர்களை பற்றிய முழு விவரங்களான புகைப்படம், செல்போன் எண் ஆகியவற்றை யாத்திரை சென்றவர்களின் உறவினர்கள் உடனே மாவட்ட நிர்வாகத்தினரிடம் தெரிவிக்க வேண்டும். இதை வைத்து யாத்திரை சென்றவர்களை பத்திரமாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.