தற்போதைய செய்திகள்

மதுரையில் செயின் பறித்த திருடனை மடக்கிப் பிடித்த வீரப்பெண்

மதுரையில், செயினைப் பறித்துக் கொண்டு ஓட முயன்ற திருடனை மடக்கிப் பிடித்துள்ளார் வீரப்பெண் ஒருவர்.

ஜெயப்பாண்டி

மதுரையில், செயினைப் பறித்துக் கொண்டு ஓட முயன்ற திருடனை மடக்கிப் பிடித்துள்ளார் வீரப்பெண் ஒருவர்.

மதுரை லெட்சுமிபுரம் ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பிரபாவதி (36). இன்று காலை வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த போது 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், பிரபாவதியிடம், விலாசம் கேட்பது போல வந்து பேசினார். அப்போது, பிரபாவதியின் கழுத்தில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை பறித்துள்ளார்.

அப்போது, அந்த வாலிபரை பிடித்துக் கொண்டு பிரபாவதி போராடியுள்ளார். பிரபாவதியிடம் இருந்து தப்பிப்பதற்காக அவன் தாக்கியுள்ளான். எனினும், பிரபாவதியின் பிடி தளரவில்லை. பிரபாவதியின் கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, திருடனைப் பிடித்தனர்.

இதையடுத்து, திருடன் தாக்கியதால் காயமடைந்த பிரபாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT