முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆந்திர மாநில மதுபாட்டில்களை விற்ற இருவர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுத்தூர் பகுதியில் ஆந்திர மாநில மதுபாட்டில்களை விற்ற அதே ஊரை சேர்ந்த சந்திரன்(41), ஆனந்தன்(31) ஆகிய இருவரும் பாதிரிவேடு போலீஸாரால் இன்று கைது

தற்போதைய செய்திகள்

ஆந்திர மாநில மதுபாட்டில்களை விற்ற இருவர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுத்தூர் பகுதியில் ஆந்திர மாநில மதுபாட்டில்களை விற்ற அதே ஊரை சேர்ந்த சந்திரன்(41), ஆனந்தன்(31) ஆகிய இருவரும் பாதிரிவேடு போலீஸாரால் இன்று கைது

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:28 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுத்தூர் பகுதியில் ஆந்திர மாநில மதுபாட்டில்களை விற்ற அதே ஊரை சேர்ந்த சந்திரன்(41), ஆனந்தன்(31) ஆகிய இருவரும் பாதிரிவேடு போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுத்தூர் பகுதியில் ஆந்திர மாநில மதுபான பாட்டில்களை சிலர் விற்பதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்களின் சார்பாக புகார் சென்றது. இதனை ஒட்டி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பாதிரிவேடு போலீஸார் சாணாபுத்தூர் பகுதியில் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது சாணாபுத்தூர் ஏரிக்கரையோரம் ஆந்திர மாநில மதுபாட்டில்களை விற்ற சாணாபுத்தூரை சேர்ந்த செல்லதுரை மகன் சந்திரன், கிருஷ்ணன் மகன் ஆனந்தன் பாதிரிவேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.நிகழ்வின் போது சந்திரனிடம் இருந்து 50 குவார்ட்டர் பாட்டில்களும், ஆனந்தனிடம் இருந்து 25 குவார்ட்டர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள பாதிரிவேடு போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →