முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் : கடலில் குளிக்க சென்ற மூன்று மாணவர்கள் காணவில்லை

சிதம்பரம் அருகே கடலில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்களைக் காணவில்லை. அவர்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:28 PM
பகிர்:

சிதம்பரம் அருகே கடலில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்களைக் காணவில்லை. அவர்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே திங்கள்கிழமை மதியம் கடலில் குளிக்கச் சென்ற நெய்வேலியைச் சேர்ந்த மூன்று மாணவர்களை காணவில்லை. தீயணைப்புத்துறையினர் மற்றும் மீனவர்கள் அம்மாணவர்களை தேடி வருகின்றனர்.

நெய்வேலி வட்டம் 27-ஐ சேர்ந்த காசிநாதன் மகன் கலையரசன் (18), வட்டம் 18-ஐ சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் செபஸ்டியன் (18), வட்டம் 5-ஐ சேர்ந்த இளங்கோ மகன் ஆதர்ஷ் (18). இவர்கள் மூவரும் திங்கள்கிழமை ஒரே மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதி கடற்கரைக்கு வந்துள்ளனர்.

Advertisement

பின்னர் மோட்டார் சைக்கிள் அருகே செல்போன்கள், உடைகள், காலணிகளை வைத்துவிட்டு கடலில் குளிக்கச் சென்றனர். ஆனால் கடலில் குளித்த அவர்கள் நீண்ட நேரமாகியும் கரைக்கு திரும்பவில்லை. இது குறித்து ஊர்மக்கள் போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறையினரும், மீனவர்களும் கடலில் அம்மாணவர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments