பண்ருட்டியில் பெண் கழுத்தை நெறித்துக் கொலை : நகைக் கொள்ளை
பண்ருட்டியில் 60 வயது பெண் ஒருவர் நகைக்காக கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பண்ருட்டியில் 60 வயது பெண் ஒருவர் நகைக்காக கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம், மேல்குமார மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் நெல்லிக்குப்பம் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்தவர். இவரது மனைவி ஆண்டாள் (60). மேல்குமாரமங்கலத்தில் மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் தென்பெண்ணை ஆற்றின் அருகே இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக நேற்று மாலை ஆண்டாள் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்ததில், கரும்புத் தோட்டத்தில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் ஆண்டாள் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த ஒன்றேகால் சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இது குறித்து அவரது மகன் தென்னரசு பண்ருட்டி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் பண்ருட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.