முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விஜய் சிங்லே சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:32 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விஜய் சிங்லே சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று மதியம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திருவண்ணாமலை ஆட்சியருக்கு பேக்ஸ் மூலம் பணியிட மாற்றம் குறித்த அறிவிப்பு வந்தது.

அப்போது, கல்வித் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் இருந்த ஆட்சியருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கூட்டத்தை மேற்கொண்டு நடத்துமாறு கல்வித் துறை அதிகாரிகளிடம் கூறிவிட்டு அவர் கிளம்பினார்.

இதையடுத்து இன்று விஜய் சிங்லே மாவட்ட வருவாய் துறை அலுவலரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.

இதுவரை மதுராந்தகம் பகுதியின்  துணை ஆட்சியராக இருந்த ஞானசேகரன் ஐஏஎஸ் பதவி உயர்வு பெற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.