மனை பட்டா ஒதுக்கியதில் முறைகேடு: சார் ஆட்சியர் விசாரணை
பண்ருட்டி ஒன்றியம் காடாம்புலியூரில் காந்தி நகர் காலனி உள்ளது. இங்கு உள்ளவர்களுக்கு வீடு மனை பட்டா வழங்குவதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் அருகில் உள்ள 4 1/2 ஏக்கர் நிலம் ஆதி திராவிடர்
பண்ருட்டி ஒன்றியம் காடாம்புலியூரில் காந்தி நகர் காலனி உள்ளது. இங்கு உள்ளவர்களுக்கு வீடு மனை பட்டா வழங்குவதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் அருகில் உள்ள 4 1/2 ஏக்கர் நிலம் ஆதி திராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்டது. பிரச்னை காலமாக அந்த நிலங்களை பயனாளிகளுக்கு ஒதுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தானே புயலில் பாதிக்கப்பட்டபோது அந்த நிலத்தில் அமைச்சர் 5 நபர்களுக்கு பட்டா கொடுத்து தொடங்கி வைத்தார். அதன் பினனர் 70 பேருக்கு பட்டா கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பட்டா பெற்றவர்கள் பெரும்பாலானவர்கள் வீடு, நிலம் உள்ளவர்களாகவும், தொகுப்பு வீடுகள் வாங்கியவர்களாகவும், முன்னரே பட்டா பெற்றவர்களாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சார் ஆட்சியர் லலிதா இன்று விசாரணை நடத்தி வருகிறார்.