இலங்கை சிறைபிடித்த மீனவர்களை மீட்கக் கோரிக்கை: ஆட்சியர் பேச்சுவார்த்தை
இலங்கை கடற்படை அண்மையில் தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்து, இலங்கை சிறையில் அடைத்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அவர்களின்
இலங்கை கடற்படை அண்மையில் தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்து, இலங்கை சிறையில் அடைத்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அவர்களின் உறவினர்கள், இன்று காலை அவர்களை மீட்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் ஆட்சியர் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மீனவர்களை உடனடியாக மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார் அவர்.