சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மெக்கானிக் சாவு
சிதம்பரம் எல்லையம்மன் கோயில் தெருவில் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் வைத்திருப்பவர் மெக்கானிக் கோபாலகிருஷ்ணன் (32). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு வாட்டர் சர்வீஸ் செய்ய
சிதம்பரத்தில் மின்சாரம் தாக்கி இருசக்கர வாகன மெக்கானிக் இறந்தார்.
சிதம்பரம் எல்லையம்மன் கோயில் தெருவில் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் வைத்திருப்பவர் மெக்கானிக் கோபாலகிருஷ்ணன் (32). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு வாட்டர் சர்வீஸ் செய்ய மின்மோட்டாரை இயக்கிய போது மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த நகர போலீஸார் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இறந்து போன கோபாலகிருஷ்ணனுக்கு சிந்து என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.