சிதம்பரம் அருகே சாலையோரம் தனியார் பஸ் சாய்ந்ததில் 11 பேர் காயம்
சிதம்பரத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு மாலை 3 மணிக்கு பஸ் புறப்பட்டு சென்றது. சிதம்பரம் அருகே கீரப்பாளையம்-சாக்காங்குடிக்கு இடையே சாலை
சிதம்பரம் அருகே தனியார் பஸ் ஒன்று சாலையோரம் சாய்ந்ததில் பஸ்ஸில் பயணம் செய்த 11 பேர் காயமடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
சிதம்பரத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு மாலை 3 மணிக்கு பஸ் புறப்பட்டு சென்றது. சிதம்பரம் அருகே கீரப்பாளையம்-சாக்காங்குடிக்கு இடையே சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது சாலையோரம் பஸ் இறங்கிய போது பெய்த மழையில் செம்மண்ணில் சக்கரம் சிக்கி பஸ் சாய்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த வடக்கு சென்னிநத்தத்தைச் சேர்ந்த ருக்குமணி (60), ராஜலட்சுமி (40), விளாகத்தைச் சேர்ந்த மதியழகன் (54), கிளியனூரைச் சேர்ந்த சீதாலட்சுமி (40), கோபிகா (9), சங்கர் (24), காமாட்சி (40), ரத்தினாம்பாள் (60), விருத்தாசலைத்தைச் சேர்ந்த மூர்த்தி (52), எறும்பூரைச் சேர்ந்த பாஸ்கர் (33), மணக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் உள்ளிட்ட 11 பேர் காயமுற்றனர். காயமுற்ற அனைவரும் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.