தென்பெண்ணை ஆற்று மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தவர் சாவு
திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் சேகர் (50). இவர் திருவண்ணாமலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் சேகர் (50). இவர் திருவண்ணாமலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர், மயானக்கொள்ளை திருவிழாவைக் காண குடும்பத்துடன் திருக்கோவிலூர் வந்துள்ளார். திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் பாலத்தில் தனியாக நடந்து வந்த சேகர், திடீரென மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.