மதுரை விமான நிலையம் முற்றுகை: வழக்குரைஞர்கள் போராட்டம்
மதுரையில் வழக்குரைஞர்கள் விமான நிலயத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
மதுரையில் வழக்குரைஞர்கள் விமான நிலயத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
சுமார் 200 பேர் இன்று பிற்பகல் 11 மணி அளவில் விமான நிலையம் முன் திரண்டனர். அவர்கள் ராஜபட்ச, மன்மோகன் சிங் ஆக்யோர் படங்களைக் கைகளில் வைத்திருந்தனர். ராஜபட்ச உருவப் படத்தை செருப்பால் அடித்து, கோஷம் இட்டனர். பின்னர் இருவரது படங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.
வழக்குரைஞர்களின் முற்றுகைப் போராட்டத்தால், மதுரை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியே வர இயலவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.