பண்ணாரி மாரியம்மன் கோவில் தீமிதி விழாவில் சில அம்சங்கள்
* குண்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு விஐபி பாஸ் வழங்கும் முறை நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது, விஐபி பாஸ் வழங்கும் முறை ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கினர்.
பண்ணாரி மாரியம்மன் கோவில் தீமிதி விழாவில் இந்தமுறை...
* குண்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு விஐபி பாஸ் வழங்கும் முறை நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது, விஐபி பாஸ் வழங்கும் முறை ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கினர்.
* வெளியூரில் இருந்து வரும் கார், வேன், லாரி போன்ற சுற்றுலா வாகனங்களுக்கு கோவில் வளாகத்தில் நிறுத்தும் முறை பின்பற்றப்பட்டது. தற்போது, கோவிலில் இருந்து 3 கி.மீட்டருக்கு முன்னதாக தாற்காலிக நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டு அங்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டது. முக்கிய பிரமுகர்களுக்காக வழங்கப்பட்ட கால் பாஸ்கள் 10 ஆயிரத்தில் இருந்து 500 ஆக குறைக்கப்பட்டது.
* பக்தர்கள் குண்டம் இறங்கும் இடத்தில் இருந்து அம்மன் தரிசனம் செய்யும் இடம் வரை நீண்ட கியூ அமைக்கப்பட்டதால் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி அம்மனை தரிசனம் செய்தனர்.