முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பெண்ணிடம் நூதன முறையில் பத்தரை பவுன் நகைகள் திருட்டு

சிதம்பரத்தில் நூதன முறையில் பெண்ணிடம் பத்தரை பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:59 AM
பகிர்:

சிதம்பரத்தில் நூதன முறையில் பெண்ணிடம் பத்தரை பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.

சிதம்பரம் சிவசக்திநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண் விரிவாக்க அலுவலர் வைத்தியலிங்கம். இவரது மனைவி மங்கையர்கரசி (55) வெளியூர் சென்று ஓமக்குளம் பஸ்நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு சென்றார். அப்போது முதல் கிராஸ் ரோட்டில் மர்ம ஆசாமிகள் இருவர் வழிமறித்து தாங்கள் போலீஸார் என்றும், அப்பகுதியில் கலவரம் நடப்பதாகவும் நகைகளை பத்திரமாக எடுத்துச் செல்லவும் எனக்கூறி மங்கையர்கரசி கழுத்தில் அணிந்திருந்த பத்தரை பவுன் மதிப்பிலான டாலர் செயின், ஒரு செட் வளையல், 2 மோதிரங்கள் ஆகியவற்றை கழற்றி பெற்று பொட்டலமாக மடித்து கொடுத்து அனுப்பியுள்ளனர். மங்கையர்கரசி வீட்டிற்கு சென்று பார்த்த போது நகைகளுக்கு பதிலாக பொட்டலத்தில் கற்கள் இருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments