முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈழத்தமிழர்க்கு ஆதரவாக கடலூரில் கடையடைப்பு

ஈழத் தமிழர்க்கு ஆதரவாகவும், தமிழர் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடலூர் நகரில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:00 AM
பகிர்:

ஈழத் தமிழர்க்கு ஆதரவாகவும், தமிழர் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடலூர் நகரில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது. இதை ஒட்டி, இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் குறிப்பிட்ட அளவில் இயங்குகின்றன. பொது நல அமைப்புகள் சார்பில் நடைபெறும் இந்த அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. உண்ணாவிரதப் போராட்டம் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்று வருகிறது. உண்ணாவிரதத்தில் சுமார் 300 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.