நாகப்பட்டினம் பகுதியில் கார் கண்ணாடிகளை உடைத்த மர்ம கும்பல் வெறிச்செயல்
நாகப்பட்டினத்தில் வெளிப்பாளையம் சுற்றுப் பகுதிகளில் ராமநாயக்கன் குளத்தெரு, சிவன்கோவில் தெரு, பீச் ரோடு, உள்பட 12 தெரு
நாகப்பட்டினத்தில் வெளிப்பாளையம் சுற்றுப் பகுதிகளில் ராமநாயக்கன் குளத்தெரு, சிவன்கோவில் தெரு, பீச் ரோடு, உள்பட 12 தெருக்களில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் சேதப்படுத்தப் பட்டிருந்தன.
நேற்று இரவு இந்தச் சம்பவம் நடந்தது. நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று, இரு சக்கர வாகனங்களில் வந்ததாகவும், கல் கட்டைகளால் சேதம் ஏற்படுத்திச் சென்றதாகவும் தெரிகிறது. இது குறித்து வெளிப்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.