குடிபோதையில் மனைவியை அரிவாளல் வெட்டிய கணவன் கைது
திருச்சுழி அருகே குடிபோதையில் மனைவியை அரிவளால் வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சுழி அருகே குடிபோதையில் மனைவியை அரிவளால் வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அம்மன்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து என்பவரின் மனைவி பூமயில்(28). இவரது கணவர் புதன்கிழமை இரவு அதிகமாக குடித்து விட்டு தெருவில் கண்டபடி பேசி தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக அத்தெருப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பூமயிலிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, குடிபோதையில் இருந்த கணவரை மனைவி தட்டிக் கேட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த மாரிமுத்து அருகில் வைத்திருந்த அரிவாளால் மனைவியை பல்வேறு இடங்களில் வெட்டியதால் படுகாயம் அடைந்தார்.
Advertisement
இதனால், படுகாயம் அடைந்த பூமயிலுக்கு கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகி்சசை பெற்று வருகிறார். இது குறித்து பூமயில் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கணவர் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.