வங்கி வாசலில் பணத்தைச் சிதறவிட்டு ரூ.3 லட்சம் கொள்ளை
மதுரை அருகே கீழே ரூபாய் நோட்டுகளைச் சிதறவிட்டு, ஹோட்டல் அதிபரின் கவனத்தை திசை திருப்பி, ரூ. 3 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.
மதுரை அருகே கீழே ரூபாய் நோட்டுகளைச் சிதறவிட்டு, ஹோட்டல் அதிபரின் கவனத்தை திசை திருப்பி, ரூ. 3 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.
மதுரை திருநகர் இந்தியன் வங்கி அருகே வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தார் ஹோட்டல் அதிபர் செல்வம் என்பவர். அவர், வங்கி வாசலில் வந்த போது, ரூபாய் நோட்டுகளை கீழே சிதறவிட்டு, அவர் கவனத்தைத் திசைதிருப்பி, அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தைக் கொள்ளை அடித்தனர் மர்ம நபர்கள் சிலர். இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.