விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையால் முதியவர் விஷம் குடித்து சாவு
விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையால் முதியவர் விஷ மருந்து அருந்தி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையால் முதியவர் விஷ மருந்து அருந்தி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே தாதம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பணன்(60). கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தில் முக்கிய செலவு மேற்கொள்வதற்காக மனைவி நகையை அடகு வைத்துள்ளார்.
இந்த நகையை திருப்பிர தர கேட்டதால், இவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த கருப்பணன், அதிகாலையில் மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் விவசாய பயிர்களுக்கு வாங்கி வைத்திருந்த விஷமருந்தை குடித்து உயிரிழந்தார். இது குறித்து அவரது உறவினர் மாரியப்பன் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Advertisement