ஸ்ரீநடராஜர் கோயிலில் வேதபாராயணம் நிகழ்ச்சி!
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நேற்று(வியாழக்கிழமை) ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு நடைபெற்ற மகாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீசித்சபேச திரிவேத பாராயண பரிபாலன சபா சார்பில் வேதபாராயணம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நேற்று(வியாழக்கிழமை) ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு நடைபெற்ற மகாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீசித்சபேச திரிவேத பாராயண பரிபாலன சபா சார்பில் வேதபாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 25-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள், வேதபிராமணர்கள் பங்கேற்று வேதபாராயணம் செய்தனர். வேதபாராயணம் செய்த வேதார்திகளுக்கு சபா தலைவர் ஆடிட்டர் ஏ.பாலசுப்பிரமணியன் பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆடிட்டர் பி.நடராஜன், என்.ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.