இளம்பாரதி விருது வழங்கும் விழா!
விழாவில் உலகஅமைதி வேண்டி ஒரு நிமிடம் மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதியார் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முனவர் கே.எஸ்.விநாயகம் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஜி.சக்தி மற்றும் பொற்றோர்கள் வாழ்த்துரையாற்றினர். அரிமா மண்டலத் தலைவர் பெரி.முருகப்பன் மாணவ
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஈரோடு பாரதியார் கல்வி மேம்பாட்டு மையம் சார்பில் சிறந்த மாணவர்களுக்கு இளம்பாரதி விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் உலகஅமைதி வேண்டி ஒரு நிமிடம் மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதியார் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முனவர் கே.எஸ்.விநாயகம் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஜி.சக்தி மற்றும் பொற்றோர்கள் வாழ்த்துரையாற்றினர். அரிமா மண்டலத் தலைவர் பெரி.முருகப்பன் மாணவ, மாணவியர்களுக்கு இளம்பாரதி விருதுகளை வழங்கிப் பேசினார். ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வி.முத்துக்குமரன் நன்றி கூறினார்.