சிதம்பரம் அருகே இரு பஸ் கண்ணாடி உடைப்பு: டிரைவர் உள்ளிட்ட மூவர் காயம்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் அருகே தவிர்த்தாம்பட்டு கிராமம் அருகே அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைக்கப்பட்டன. மேலும் சிதம்பரம் அருகே நாஞ்சலூர் விஐபி நகர் அருகே சென்ற தனியார் பஸ் மீது
சிதம்பரம் அருகே இன்று பிற்பகல் இரு பஸ்கள் மீது கல்வீசி தாக்குகலில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. தனியார் பஸ் டிரைவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் அருகே தவிர்த்தாம்பட்டு கிராமம் அருகே அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைக்கப்பட்டன. மேலும் சிதம்பரம் அருகே நாஞ்சலூர் விஐபி நகர் அருகே சென்ற தனியார் பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ் டிரைவர் சக்திவீரன், பயணி செல்வி (22) உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர். பஸ் கண்ணாடியும் உடைக்கப்பட்டன.