ஒரு வழிப்பாதையில் ஆட்டோ ஓட்ட அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
ராஜபாளையத்தில் ஒரு வழிப்பாதையில் ஆட்டோக்கள் ஓட்டுவதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையத்தில் ஒரு வழிப்பாதையில் ஆட்டோக்கள் ஓட்டுவதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.சுவாமிநாதன், மாவட்ட தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தற்போது ராஜபாளையம் நகரில் ஓரு வழிப்பாதையில் ஆட்டோக்கள் ஓட்ட முடியாத நிலை இருக்கிறது. இப்பாதை வழியாக செல்லும் வகையில் தான் பயணிகள் வருகிறார்கள். அதனால், இப்பாதையில் ஆட்டோக்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ராஜபாளையத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement