முகப்பு
தற்போதைய செய்திகள்

உலகத் தமிழ் மாநாடு நடத்த கம்யூனிஸ்ட் கோரிக்கை

அதிமுக ஆட்சியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும். இந்திய திரைப்படத் துறையின் நூற்றாண்டு விழா அண்மையில் தில்லியில் நடைபெற்றது. அதில் தமிழ் திரைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு தனது

Updated On : 7 மே, 2013 at 7:29 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:09 PM

அதிமுக ஆட்சியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே. லிங்கமுத்து (குடியாத்தம்) கோரிக்கை விடுத்தார்.

பேரவையில் நடைபெற்ற செய்தி, விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:-

அதிமுக ஆட்சியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும். இந்திய திரைப்படத் துறையின் நூற்றாண்டு விழா அண்மையில் தில்லியில் நடைபெற்றது. அதில் தமிழ் திரைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு தனது கண்டனத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் கருணைத் தொகையை அதிகரிக்க வேண்டும். அதிகரித்து வரும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்றார்.

Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்கள் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை கருணைத் தொகை வழங்கப்படுகிறது. ஆண்டு கணக்கில்லாமல் கருணைத் தொகை வழங்க வேண்டும்.தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, தொலைக்காட்சித் தொடர்களில் வரும் காட்சிகளை ஒழுங்குபடுத்த சென்சார் போர்டு அமைக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.