தானே புயல் வீடுகளுக்கு ரூ.1.50 லட்சம் வழங்க முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ கோரிக்கை
தமிழ்நாட்டை தாக்கிய தானே புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டும் சிறப்பான திட்டத்தை தாங்கள் அறிவித்து அத்திட்டத்தின்படி வீடு கட்டும் பணி
தானே புயல் வீடுகள் கட்ட ரூ.1 லட்சம் வழங்குவது என்பதை உயர்த்தி ரூ 1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் சென்னை கோட்டையில் நேரில் சந்தித்து கடிதம் அளித்தார்.
கடிதத்தில்: தமிழ்நாட்டை தாக்கிய தானே புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டும் சிறப்பான திட்டத்தை தாங்கள் அறிவித்து அத்திட்டத்தின்படி வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுமானப் பொருள்களின் கடுமையான விலை உயர்வால் பயனாளிகள் வீடுகட்டும் பணியை தொடர முடியமால் தவித்துக் கொண்டுள்ளார்கள். ஏற்கனவே இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் தொகையின ரூ 1.20 லட்சமாகவும், பசுமை வீடு திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ 1.80 லட்சம் தொகையை, ரூ 2.10 லட்சமாகவும் உயர்த்தி ஆணை பிறப்பித்தீர்கள். அதுபோல தானே புயல் வீடுகளுக்கும் நிர்ணயமிக்கப்பட்ட தொகை ரூ.1 லட்சத்தை ரூ 1.50 லட்சமாக உயர்த்தி ஏழை, எளிய மக்கள் வீடு கட்டும் பணியினை நிறைவு செய்ய உதவிட வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.