தற்போதைய செய்திகள்

+2 முடிவுகள்: நாமக்கல் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் வழக்கம் போல் இந்த ஆண்டும் முதல் மூன்று இடங்களைப் பெற்று அசத்தியுள்ளனர்.

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் வழக்கம் போல் இந்த ஆண்டும் முதல் மூன்று இடங்களைப் பெற்று அசத்தியுள்ளனர்.

நாமக்கல்லைச் சேர்ந்த வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஜெயசூர்யா 1189  மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

நாமக்கல்லைச் சேர்ந்த கிரீன் பார்க் எம்.எஸ்.எச்.எச் பள்ளியைச் சேர்ந்த எஸ். அபினேஷ் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

திருச்செங்கோடு வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.பழனி ராஜ் 1188 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

மாநிலத்திலேயே நாமக்கல்லைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் 1187 மதிப்பெண்களைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளியில் பயின்ற கலைவாணி,

நாமக்கல் கிரீன்பார்க் பள்ளியின் விஷ்ணுவரதன், கண்மணி, மனோதினி ஆகிய மூவரும் என நான்கு பேர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT