முகப்பு
தற்போதைய செய்திகள்

பஸ் எரிப்பு: தேசிய தடுப்புக்காவல் சட்டத்தில் மேலும் 2 பேர் கைது

காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் எரிப்பு வழக்கில் பா.ம.க.வைச் சேர்ந்த மேலும் 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தேசிய தடுப்புக்காவல் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைத்தனர்.

Updated On : 12 மே 2013, 7:33 pm IST
பகிர்:

காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் எரிப்பு வழக்கில் பா.ம.க.வைச் சேர்ந்த மேலும் 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தேசிய தடுப்புக்காவல் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைத்தனர்.

 பா.ம.க. நிறுவனர் ராமாதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் ஏப்ரல் 30-ம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அன்று இரவு தாம்பரத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ்ஸை, காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது.

 இது தொடர்பாக பா.ம.க.-வைச் சேர்ந்த தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் (50), மேலும் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் இளங்கோ (31), முருகேசன் மகன் மாரி (29) உள்பட 12 பேரை பாலுச்செட்டிசத்திரம் போலீஸார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

 இந்த வழக்கு தொடர்பாக தாமால் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறனை தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். இந்த நிலையில் இதே வழக்கு தொடர்பாக இளங்கோ, மாரி ஆகியோரை தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, எஸ்.பி. சேவியர் தன்ராஜ் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து அவர்களை தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் லி. சித்ரசேனன் ஞாயிற்றுக்கிழமை (மே 12) உத்தர விட்டார். இதைத் தொடர்ந்து இளங்கோ, மாரி ஆகியோரை போலீஸார் தேசிய தடுப்புக் காவல் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.