திருக்கோவிலூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவி மரணம்
திருக்கோவிலூர் அருகே ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் தனம் (13). இவர் திங்கள் கிழமை இன்று காலை 6 மணி அளவில் தங்களுக்குச் சொந்தமான நிலத்துக்குச் சென்றுள்ளார்.
திருக்கோவிலூர் அருகே ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் தனம் (13). இவர் திங்கள் கிழமை இன்று காலை 6 மணி அளவில் தங்களுக்குச் சொந்தமான நிலத்துக்குச் சென்றுள்ளார்.
அப்போது, தேசிங்கு ராஜா என்பவருக்குச் சொந்தமான பக்கத்தில் உள்ள நிலத்தில் நேற்று இரவு அடித்த சூறாவளியில் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.
அதில் சிக்கி சிறுமி தனம் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.