அண்ணாமலைப் பல்கலை ஊழியர்கள் வெடி வெடித்து கொண்டாட்டம்
இதனையடுத்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் தலைமையில் பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் பல்கலைக்கழக ஊழியர்கள்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் சட்டதிருத்த மசோதா வியாழக்கிழமை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் தலைமையில் பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் பல்கலைக்கழக ஊழியர்கள் ஊர்வலமாக சென்று நிர்வாகக் கட்டடம் அருகே, ஊழியர் சங்க அலுவலகம் அருகே வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னதாக ராஜேந்திரன் சிலை அருகே மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செயலாளர் ராஜா தலைமையில் நிர்வாகிகள் வெடி, வெடித்து கொண்டாடினர்.