போலி பத்திரம் தயார் செய்து இடத்தை விற்பனை செய்தவர் மீது வழக்குப் பதிவு!
சிதம்பரம் புதுத்தெருவைச் சேர்ந்த நிசார்முகமது (36). இவருக்கு சொந்தமான 350 சதுரஅடி இடம் பள்ளிப்படையில் உள்ளது. இந்த இடத்தை மசூதித்தெருவைச் சேர்ந்த சுல்தான் சிக்கந்தர் என்பவர் நிசார்முகமது தாயார் கையொப்பமிட்டு போலி பத்திரம் தயாரித்து வேறு ஒரு நபருக்கு விற்பனை
சிதம்பரத்தில் போலி பத்திரம் தயாரித்து வேறு நபரிடம் இடத்தை விற்பனை செய்தவர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரம் புதுத்தெருவைச் சேர்ந்த நிசார்முகமது (36). இவருக்கு சொந்தமான 350 சதுரஅடி இடம் பள்ளிப்படையில் உள்ளது. இந்த இடத்தை மசூதித்தெருவைச் சேர்ந்த சுல்தான் சிக்கந்தர் என்பவர் நிசார்முகமது தாயார் கையொப்பமிட்டு போலி பத்திரம் தயாரித்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நிசார்முகமது அளித்த புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் சுல்தான் சிக்கந்தர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.