இடிதாக்கி ஒருவர் பலி.
கோபி அருகே இடி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
கோபி அருகே இடி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
கோபி ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணியன் (45). இவர் விவசாயி.
திங்கள்கிழமை இரவு தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னலுடன் இடி தாக்கியதில் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேன் கவிழ்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
கோபி அருகே கொளப்பலூர் அம்மன் கோவில்பதி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (17). இவர் திருப்பூர் பனியன் கம்பேனியில் வேலை பார்த்து வந்தார். திங்கள்கிழமை இரவு திருப்பூரில் வேலை முடிந்து வேனில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கோபி-குன்னத்தூர் சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பூபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் பூபதியை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பூபதி உயிரிழந்தார்.
இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.