முகப்பு
தற்போதைய செய்திகள்

கவுந்தப்பாடியில் தீ விபத்து: 3 கடைகள் எரிந்து சாம்பல்

கவுந்தப்பாடி-ஈரோடு ரோட்டில் செந்தில் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ, வேன் பெயின்டிங் பட்டறை உள்ளது. இந்த பெயின்டிங் பட்டறையில் உள்ள ஆம்னி வேனில் திங்கள்கிழமை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:41 AM
பகிர்:

கவுந்தப்பாடி-ஈரோடு ரோட்டில் செந்தில் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ, வேன் பெயின்டிங் பட்டறை உள்ளது. இந்த பெயின்டிங் பட்டறையில் உள்ள ஆம்னி வேனில் திங்கள்கிழமை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தொழிலாளர்கள் வெளியே ஓடி தப்பினர். அடுத்த சில நிமிடங்களில் தீ மளமளவென பரவி அருகில் உள்ள ஓட்டல், கறிக்கோழி கடை ஆகியவை பற்றி எரிந்தன.

உடனே கவுந்தப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர்.

2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டன. இருப்பினும் இந்த தீ விபத்தில் பெயிண்டிங் பட்டறை, அதில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 வேன் கள், ஒரு சரக்கு ஆட்டா, ஒரு லாரி, ஓட்டல், கறிக்கோழி கடை  எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பெயிண்டிங் பட்டறையில் நின்ற ஆம்னிவேன் கியாசில்   ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →