காதலித்து திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள நாகம்பந்தல் கிராமத்தை சேர்ந்த சந்திரமோகன் மகன் கமலக்கண்ணன்(19). இவர் அதே ஊரைச்சேர்ந்த 17 வயது பெண்ணிடம் திருமணம் செய்து
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள நாகம்பந்தல் கிராமத்தை சேர்ந்த சந்திரமோகன் மகன் கமலக்கண்ணன்(19). இவர் அதே ஊரைச்சேர்ந்த 17 வயது பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்து விட்டு பின் திருமணம் செய்ய மறுத்ததாக அப்பெண் ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் தீபா வழக்கு பதிந்து கமலக்கண்ணனை கைது செய்து விசாரிக்கின்றார்.