இலங்கையில் இருந்து 26 மீனவர்களும் காரைக்கால் திரும்பினர்
இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மீனவர்கள் 26 பேரும் இன்று காரைக்கால் திரும்பினர்.
இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மீனவர்கள் 26 பேரும் இன்று காரைக்கால் திரும்பினர்.
இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த 26 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் இன்று காலை இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். நடுக்கடலில் வைத்து இவர்கள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர். காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகளும் கடலோரக் காவல் படை காமாண்டர் தலைமையிலான குழுவும் சென்று, இன்று காலை 9.20 மணி அளவில் மீனவர்களுடன் விசைப்படகு மூலம் கரைக்கு திரும்பினர்.