பெரம்பலூர் அருகே தேர் கவிழ்ந்து ஒருவர் பலி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பாதாங்கி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இன்று மாலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த விழாவின் போது, தேர் திடீரென சரிந்தது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பாதாங்கி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இன்று மாலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த விழாவின் போது, தேர் திடீரென சரிந்தது. இதில், தேருடன் சென்ற கோபால கண்ணன் என்ற பக்தர் தேருக்கு அடியில் சிக்கிக் கொண்டு உயிரிழந்தார். 4க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.