மதுரையில் இருந்து மும்பை செல்கிறார் சீனிவாசன்
கொடைக்கானல் பங்களாவில் தங்கியிருந்த பிசிசிஐ தலைவர் சீனிவாசன் இன்று முற்பகல் 11.28க்கு மதுரைக்கு வந்து, விமான நிலையத்தில் இருந்து தனியார் விமானம் மூலம் மும்பை கிளம்பினார்.
கொடைக்கானல் பங்களாவில் தங்கியிருந்த பிசிசிஐ தலைவர் சீனிவாசன் இன்று முற்பகல் 11.28க்கு மதுரைக்கு வந்து, விமான நிலையத்தில் இருந்து தனியார் விமானம் மூலம் மும்பை கிளம்பினார்.
நேற்று சீனிவாசனின் மருமகன் மாலை 6 மணி அளவில் கொடைக்கானலில் இருந்து மதுரை வந்து அங்கிருந்து விமானத்தில் சென்னை சென்றார். அவரை மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், பிசிசிஐ சீனிவாசனிடம் விசாரணை நடத்தப்படக் கூடும் என்று தகவல்கள் வரும் நிலையில், அவர் இன்று காலை கொடைக்கானலில் இருந்து மதுரை வந்தார். பின்னர் 11.28க்கு தனி விமானம் மூலம் மும்பைக்குச் சென்றார்.