முகப்பு
தற்போதைய செய்திகள்

சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: சாலைமறியலில் ஈடுபட்ட திமுகவினர் 150 பேர் கைது

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை, கூட்டுறவு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிமுக சார்பில் கானூர் பாலசுந்தரம் தலைமையில் 17 பேர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:57 AM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல் தொடர்பாக சாலைமறியலில் ஈடுபட்ட திமுக 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை, கூட்டுறவு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிமுக சார்பில் கானூர் பாலசுந்தரம் தலைமையில் 17 பேர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன் பின்னர் திமுகவினர் தெய்வசிகாமணி தலைமையில் 17 பேர், கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பின்னர் வேட்புமனு பரிசீலனை செய்யும் பணி நடைபெற்றதால் அதிமுகவினர் ஒரு பிரிவினராகவும், திமுகவினர் ஒரு பிரிவினராகவும் நின்று கொண்டிருந்தனர். இருதரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் இருக்க கடலூர் மாவட்ட ஏடிஎஸ்பி ராஜன் தலைமையில் சுமார் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பின்னர் அதிமுகவினர் வளாகத்தை விட்டு வெளியேறினர். இதனையடுத்து திமுகவினரை போலீஸார் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தினர். இதனையடுத்து திமுகவினர் போலீஸாரை கண்டித்து சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட திமுகவினர் 150 பேரை போலீஸார் கைது செய்தனர். மறியலினால் மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →