நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்து ஒருவர் சாவு: 6 பேர் காயம்
திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலத்தகாயமடைந்து உயிரிழந்தார். காரில் பயணம் செய்த 6 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலத்தகாயமடைந்து உயிரிழந்தார். காரில் பயணம் செய்த 6 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் ஆவடியைச் சேர்ந்த உறவினரின் திருமணத்திற்கு, ஆவடியில் இருந்து ராஜன் (23), அசோக்குமார் (19), சந்திரசேகர் (22), மோகன் (24), சண்முகம் (22) கார்த்திக் ஆகியோர் காரில் ஞாயிற்றுக்கிழமை இரவு மணவாளநகருக்கு வந்தனர்.
பின்னர் திருமண நிகழ்ச்சி முடிந்து திங்கள்கிழமை காலை காரில் திரும்பிச் சென்றனர். காரை ஆவடியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் துரைராஜ் (24) ஓட்டிச் சென்றார்.
Advertisement
கார் மணவாளநகரை அடுத்த அரண்வாயல் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்தது. நாய் மீது ஏற்றாமல் இருக்க காரை திருப்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் இறந்தார்.
இந்த விபத்து குறித்து செவ்வாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்