முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் பிரசாதக்கடைகள் ரூ.37 லட்சத்திற்கு ஏலம் போனது!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கிழக்கு நுழைவு வாயில், மேற்கு நுழைவுவாயில் ஆகிய இரு பிரசாதக்கடைகள் நடத்துவதற்கான ஏலம் கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி,

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:58 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் பிரசாதக்கடைகள் இந்த ஆண்டு ரூ.37 லட்சத்திற்கு ஏலம் போனது. இது கடந்த ஆண்டை விட ரூ.14 லட்சம் கூடுதலாக ஏலம் போய் உள்ளது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கிழக்கு நுழைவு வாயில், மேற்கு நுழைவுவாயில் ஆகிய இரு பிரசாதக்கடைகள் நடத்துவதற்கான ஏலம் கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, நிர்வாக அதிகாரி க.கிருஷ்ணகுமார், வட்ட ஆய்வாளர் ரே.தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. அலுவலக கணக்கர் வாசு, வெங்கடேசன், உதவியாளர் ஜே.முத்துக்குமரன் ஆகியோர் ஏலத்தை நடத்தினர்.

ஏலத்தில் மொத்தம் 6 பேர் பங்கேற்றனர். ஆனால் யாரும் ஏலம் கேட்கவில்லை. டெண்டர் மட்டும் பெட்டியில் போட்டனர். டெண்டர் பெட்டியை திறந்ததில் அதிகபட்சமான தொகையான 36 லட்சத்து 99 ஆயிரத்து, 999 ரூபாய் ஏலம் கேட்டிருந்த நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முத்தூரைச் சேர்ந்த ஏ.அன்பரசனுக்கு கடைகள் நடத்த ஏலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் புவனகிரியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவர் பிரசாதக்கடைகளை ரூ 23 லட்சத்து 33 ஆயிரத்து 331-க்கு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →