முகப்பு
தற்போதைய செய்திகள்

தனியார் பள்ளி ஆசிரியையிடம் 3 சவரன் நகை பறிப்பு

விருதுநகர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமாரின் மனைவி இசைவாணி(35). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  நேற்று(புதன்கிழமை) இரவு வெயிலுகந்தம்மன் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு உறவினரின் அக்னிச்சட்டி எடுத்துச் செல்லும்

Updated On : 30 மே, 2013 at 3:24 PM
பகிர்:

விருதுநகரில் திருவிழா பார்த்துவிட்டு தனியாக சென்ற தனியார் பள்ளி ஆசிரியையின் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

விருதுநகர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமாரின் மனைவி இசைவாணி(35). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  நேற்று(புதன்கிழமை) இரவு வெயிலுகந்தம்மன் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு உறவினரின் அக்னிச்சட்டி எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு செய்வதற்கு சென்றாராம். அங்கு, சாமி வழிபாடு செய்து விட்டு இரவு 10.30-க்கு சண்முகம் சாலை வழியாக தனது இல்லத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின் தொடர்ந்து வந்த உயரமாகவும், கருப்பாகவும் இருந்த பெயர் தெரியாத மர்ம ஒருவர் வழிமறித்து இசைவாணியின் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்தார். உடனே அபாயக்குரல் எழுப்பிய நிலையில் பொதுமக்கள் அங்கு வருவதற்குள் மர்ம ஓடி தலைமறைவானார். இது குறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் இசைவாணி புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.