நவ.14-ல் மெய்கண்டதேவ நாயனார் கோயில் கும்பாபிஷேகம்: 4 மடாதிபதிகள் பங்கேற்பு
சிதம்பரம் மாலைக்கட்டித்தெருவில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீன கிளை மடத்தில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமான் மற்றும் ஸ்ரீமெய்கண்டதேவ நாயனார் திருக்கோயில் மகா
சிதம்பரம் மாலைக்கட்டித்தெருவில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீன கிளை மடத்தில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமான் மற்றும் ஸ்ரீமெய்கண்டதேவ நாயனார் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வருகிற நவ.14-ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. 4 மடாதிபதிகள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
திருவாவடுதுறை ஆதீன 24வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் தலைமை வகிக்கிறார். தருமை ஆதீனம், திருப்பனத்தாள் காசி மடத்து அதிபர் ஸ்ரீமுத்துக்குமாரசாமி தம்பிரான், சிதம்பரம் மெளன மடாதிபதி மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்று அருளாசி வழங்குகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவ.13-ம் தேதி புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன வைத்தியநாத தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம் கிளை ஆய்வாளர் ந.செந்தில்குமார், இந்து ஆலய பாதுகாப்புக்குழு செயலாளர் ஜோதி.குருவாயூரப்பன், சந்திர.பாலசுப்பிரமணிய தேசிகர், கயிலை முத்துகணேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.