முகப்பு
தற்போதைய செய்திகள்

மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்: செளம்யா அன்புமணி

சிதம்பரம் சீனுவாசா திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அண்ணாமலைநகர் பாட்டாளி மக்கள் கட்சி நகர தலைவர் மு.சுரேந்தர் இல்லத் திருமண விழாவில் அவர் பங்கேற்று பேசியது: மருத்துவர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:40 PM
பகிர்:

பாமகவினர் சத்தம் மட்டும் போட்டால் பத்தாது. ஆர்ப்பாட்டம் செய்தால் போதாது. மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பு தலைவர் செளம்யா அன்புமணி தெரிவித்தார்.

சிதம்பரம் சீனுவாசா திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அண்ணாமலைநகர் பாட்டாளி மக்கள் கட்சி நகர தலைவர் மு.சுரேந்தர் இல்லத் திருமண விழாவில் அவர் பங்கேற்று பேசியது: மருத்துவர் ராமதாஸின் தியாகங்களையும், அன்புமணி ராமதாஸின் சாதனைகளையும் மக்களிடையே நாம் கொண்டு சென்று அவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். ஐ.நா மன்றத்தில் சிறப்பாக பேசியவர் அன்புமணி ராமதாஸ் என நியுயார்க் மற்றும் ஜெனிவாவில் பேசுகிறார்கள். ஆனால் நாம் இங்கு பேசுவது இல்லை. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அமல்படுத்தியவர் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ். எனவே அவரது சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். மருத்துவர் ராமதாஸ் சொல்வது போல் மது, புகையிலை பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என செளம்யா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.